Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சுவாமிமலை தனியார் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக டிடிவி தினகரன் கழக தொண்டருக்கு திருமணம் செய்து வைத்த விட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு ஆவின் பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்.
விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை விவசாய நிலங்களில் செய்யாமல் யாரையும் பாதிக்காத வகையில் கடலில் பகுதிகளில் மத்திய அரசு செய்ய வேண்டும்.
அரசியலில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம் தான். குறிப்பாக எங்கள் தொண்டர்கள் யானை பலத்துடன் இருக்கின்றார்கள். அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று எங்கள் பலத்தை காட்டுவோம் என்று தெரிவித்தார்.